மரண தண்டனைக்கான தற்காலிகத் தடை நிரந்தரமாக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியாவிற்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் தெரிவித்துள்ளார். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் எவரும் தாம் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படுவோம் என அச்சப்படும் நிலை காணப்படக்கூடாது என தெரிவித்துள்ளார். மரணதண்டனைகளை மாற்றி தண்டனை குறைப்பை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கையில் காணப்பட்ட பரந்துபட்ட … Continue reading மரண தண்டனைக்கான தற்காலிகத் தடை நிரந்தரமாக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை